Saturday, 10 December 2011

இளைஞர்களே இணைந்திடுவோம்....!!!!!

 என்னடா உலகம் இது.....!!!!
திறமையை கொண்டு சென்றால்..
தெருவீதியில் நிறுத்தும் ..
பணத்தை கொண்டு சென்றால்..
பதவியில் அமர்த்தும் ...!!!
இல்லாத கடவுளுக்கு
உண்டியல் எதற்கு..?!
தாயில்லாத குழந்தைகளுக்கு
கையில் திருவோடு எதற்கு...!!!
தேசிய கொடியை மிதித்து
கட்சிக்கொடியை மதிப்பார்கள்...
கையில் கரென்சி இல்லையென்றால்..
குப்பை போல உன்னை நினைப்பார்கள்...!!
அடிமாடாய் நாம் வாழ்வதற்கு         
 சுடுகாட்டில் சென்று உறங்கிடுவோம்..
ஊழல் இல்லா உலகம் வேண்டுமென்றால்
இளைஞர்கள் களத்தில் இறங்கிடுவோம்..!!!

                                                            ~~~~~ S . சபரிநாதன் ~~~~~

5 comments: