Monday, 26 December 2011

பிரியமானவளே....


காற்றே மெதுவாக  வீசுங்கல் ...
என்  காதல்புறா குளிர்  தாங்கமாட்டால் !!!
கற்களே பூக்களாய்  மாறுங்கள் ..
என் வெண்ணிலா  வலி  தாங்கமாட்டால் !!!
சூரியனே  சற்று மெதுவாக  ஏழு .. 
என்  பூமகளின் பூவிழி உறங்கட்டும் !!!
வண்டுகளே என்  பூவின்  தேனைப்   பறிக்காதே 
அவள் என்  காதலி   என்பது  ஞாபகம்  இருக்கட்டும்  !!!

Monday, 19 December 2011


 என் கவிதைகளுக்கும் ஆயுள் குறையுதடி...
கண்ணே உன்னை காணாமல் !!!!
உன்னைப்பற்றி எழுதப்படும் ஒவ்வொரு வார்த்தையும் 
கவிதை தான் ....!!!
நீ என் கையில் புடவை வாங்கும் வரை 
காஞ்சிபுரம் பட்டுக்கு இனி பூட்டு !!!!
காற்றின் தூசியில் உன் கண்கள் கலங்கினாலும்  
கடவுளுக்கும் வெய்ப்பேன் ஒரு குட்டு....!!! 
                                                          ~~~~~~ சபரிநாதன் .s~~~~~

Wednesday, 14 December 2011

பிரியமானவளே...

உன்னைப்பற்றி எழுதப்போகிறேன் ..
முற்றுப்புள்ளி...
எங்கே வைப்பது ...!!! 

 
உன் பெயரை சொல்வதற்கே..
பயமாக இருக்கிறது ..
எங்கே காற்றும்  உன்னை
காதலித்துவிடுமோ என்று....!!!!!








ஹைக்கூ

அனாதை கண்ணில் கண்ணீர் ..
பிச்சைகாரனின் அம்மா... தாயே...
என்ற குரல் ....!!!!!

Saturday, 10 December 2011

இளைஞர்களே இணைந்திடுவோம்....!!!!!

 என்னடா உலகம் இது.....!!!!
திறமையை கொண்டு சென்றால்..
தெருவீதியில் நிறுத்தும் ..
பணத்தை கொண்டு சென்றால்..
பதவியில் அமர்த்தும் ...!!!
இல்லாத கடவுளுக்கு
உண்டியல் எதற்கு..?!
தாயில்லாத குழந்தைகளுக்கு
கையில் திருவோடு எதற்கு...!!!
தேசிய கொடியை மிதித்து
கட்சிக்கொடியை மதிப்பார்கள்...
கையில் கரென்சி இல்லையென்றால்..
குப்பை போல உன்னை நினைப்பார்கள்...!!
அடிமாடாய் நாம் வாழ்வதற்கு         
 சுடுகாட்டில் சென்று உறங்கிடுவோம்..
ஊழல் இல்லா உலகம் வேண்டுமென்றால்
இளைஞர்கள் களத்தில் இறங்கிடுவோம்..!!!

                                                            ~~~~~ S . சபரிநாதன் ~~~~~